ஆட்டோ - பைக் மோதல் : வாலிபர் படுகாயம்

ஆட்டோ - பைக் மோதல் : வாலிபர் படுகாயம்

வாலிபர் படுகாயம்

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் நகே பகுதியில் இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்லொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்திர பிரதாப் மகன் ரமேஷ் (31) கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்த ரமேஷ் கடந்த 15ஆம் தேதி கருங்கல் அருகே திப்பரமலை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்றார். பின்னர் மதியம் திங்கள் நகர் வழியாக வீடு திரும்பி பைக்கில் சென்று கொண்டிருந்த பொழுது, எதிரே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று ரமேஷ் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதில் சுய நினைவு இழந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரமேஷ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற ஆட்டோ டிரைவரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஆய்வு செய்து தேடி வருகின்றனர்.

Tags

Next Story