செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

வழக்குப்பதிவு 

குன்னம் அருகே ஆசிரியரின் தாலி செயினை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட அரியலூரைச் சேர்ந்த பெண் ஆசிரியையிடம் தாலிசெயினை வழிப்பறி செய்த குற்றத்திற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளியான திருச்சி தென்னூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் தான்ரு என்கிற தரணி 19, என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் கற்பகம் டிசம்பர் 30ஆம் தேதி குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த குன்னம் காவல் நிலைய காவல்துறையினரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி வெகுவாக பாராட்டினார்.

Tags

Next Story