இளம்பெண் மாயம் - பெற்றோர் போலீசில் புகார்

இளம்பெண் மாயம் - பெற்றோர் போலீசில் புகார்
காவல் நிலையம் 
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்-சாந்தாமணி தம்பதியினரின் மகள் தேவதர்ஷினி (19). பிளஸ்2 படித்து விட்டு, தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி வீட்டில் இருந்த தேவதர்ஷினியை திடீரென காணவில்லை. இதையடுத்து பெற்றோர்கள் அவர்களது உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர், தேவதர்ஷினி தாய் சாந்தாமணி, கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்தார். அதன் பேரில், கெங்கவல்லி எஸ்ஐ நிர்மலா வழக்குப்பதிவு செய்து, மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags

Next Story