வாலிபர் குத்திக் கொலை: போலீசார் கைது!

வாலிபர் குத்திக் கொலை:  போலீசார் கைது!

கோப்பு படம் 

தூத்துக்குடியில் வாலிபர் குத்திக் கொலை செய்த வழக்கில் சிறுவனை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி ராஜபாண்டி நகரைச் சோ்ந்த சின்னத்துரை மகன் சதீஷ்(19). இவருக்கும் மற்றொரு தரப்பை சோ்ந்த 17 வயது சிறுவனுக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வருகிறதாம். இந்நிலையில், சதீஷ் தனது நண்பா் ராஜா என்பவருடன் எம்.ஜி.ஆா்.நகா் உப்பளத்தை ஒட்டி உள்ள சாலையில் நேற்று முன்தினம் இரவு படுத்திருந்தாராம்.

அப்போது அங்கு வந்த, அந்த சிறுவன், திடீரென தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சதீஷை சரமாரியாக குத்திவிட்டு, ராஜாவுக்கும் கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த சதீஷை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த சிறுவனை நேற்று கைது செய்தனா்.

Tags

Next Story