சேலம் அருகே வாலிபருக்கு பீர் பாட்டிலால் குத்து

சேலம் அருகே வாலிபருக்கு பீர் பாட்டிலால் குத்து
அண்ணனின் நண்பரை கொலை முயற்சி
காந்திநகர் அருகே இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதத்தில் அண்ணனின் நண்பரை பீர் பாட்டிலால் குத்திய இளைஞர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சேலம் சோளம்பள்ளம் அருகேயுள்ள காந்திநகரை சேர்ந்தவர் ஜீவா (28), கூலித் தொழிலாளி. இவர் நேற்று தனது நண்பரான பாலு குப்புராஜியிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது பாலு குப்புராஜியின் தம்பி ஏழுமலை வந்துள்ளார். அவர், ஜீவாவை பெயரை சொல்லி அழைத்துள்ளார். இதனால், வயதில் சிறியவரான நீ எப்படி என்னை பெயரை சொல்லி அழைக்கலாம் என ஜீவா கேட்டுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் ஜீவாவிற்கு ஏழுமலை போன் செய்து சோளம்பள்ளம் பஸ் நிறுத்தத்திற்கு அழைத்துள்ளார்.

அங்கு ஜீவா வரவும், ஏழுமலை அவரிடம் தகராறில் ஈடுபட்டு, கையில் மதுபாட்டிலால் குத்தினார். ரத்தம் கொட்டிய நிலையில் ஜீவா அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிசூரமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story