வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

வழக்கு பதிவு

வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை. காவல்துறை வழக்கு பதிவு.
வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, புன்னம் கிராமம், பாலமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் வயது 45. இவரது மனைவி நதியா வயது 39. காமராஜுக்கு கடந்த ஒரு வருட காலமாக வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றும், அவருக்கு வயிற்று வலி நின்ற பாடு இல்லை. இதனால் விரக்தி அடைந்த மனநிலையோடு வாழ்ந்து வந்த காமராஜ், மார்ச் 29ஆம் தேதி மாலை 6 மணி அளவில், மீண்டும் வயிற்று வலி அதிகமானதால், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த அவரது மனைவி நதியா, தனது கணவனை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் காமராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நதியா காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த காமராஜ்-ன் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story