சாலையை கடக்க முயன்ற வாலிபர் வாகனம் மோதி உயிரிழப்பு

சாலையை கடக்க முயன்ற வாலிபர் வாகனம் மோதி உயிரிழப்பு

வாலாஜா அம்மணந்தாங்கல் பைபாஸ் சாலையில் வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலாஜா அம்மணந்தாங்கல் பைபாஸ் சாலையில் வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த அம்மணந்தாங்கல் பைபாஸ் சாலையில் வாணியம்பாடி காமராஜர் நகரை சேர்ந்த சரவணன் (37) என்பவர் சாலையை கடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து சரவணன் மீது மோதிய வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story