செல்போனில் ஆபாசமாக படம் எடுக்க முயன்ற வாலிபர் கைது

செல்போனில் ஆபாசமாக படம் எடுக்க முயன்ற வாலிபர் கைது
செல்போனில் ஆபாசமாக படம் எடுக்க முயன்ற வாலிபர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் , அச்சிறு பக்கத்தில் பெண்ணை செல்போனில் ஆபாசமாக படம் எடுக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அடுத்த ஒரத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த தனுசு என்பவரின் மகன் தனசேகர்(வயது 23). அப்பகுதியில் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

இவர்,தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் பெண், சுவரில்லாமல் தென்னங்கீற்று தட்டி கொண்டு அமைக்கப்பட்ட பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, தனது வீட்டின் மாடியிலிருந்து, பக்கத்து வீட்டு பெண் குளித்துக் கொண்டிருந்ததை, தனது செல்போனில் ஆபாசமாக படம் எடுக்க முயற்சி செய்ததாக கணவன், மனைவி இருவரும் இச்சம்பவம் குறித்து ஒரத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த ஒரத்தி போலீசார், மேற்படி நபரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story