மாணவியை கடத்திய வாலிபர் கைது

மாணவியை கடத்திய வாலிபர் கைது

கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே மாணவியை கடத்திச் சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார் .
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த இரும்பேடு பகுதியைச் சேர்ந்த விஜய் ரஞ்சித் (வயது 20) பிளஸ்-2 படிக்கும் மாணவியை கடத்தி சென்றதாக ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் விஜய் ரஞ்சித்தை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story