கஞ்சா விற்க முயன்ற வாலிபர் கைது

கஞ்சா விற்க முயன்ற வாலிபர் கைது

கஞ்சா விற்பனை செய்ய முயன்றவர் கைது 

ஒகேனக்கல் பகுதியில் கஞ்சா விற்க முயன்ற வாலிபர் கைது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிரபல சுற்றுலா தலமான ஒகேனக்கல்லில் கஞ்சா விற்கப்படுவதாக ஓகேனக்கல் உதவி காவல் ஆய்வாளர் விக்னேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவலர்கள் ஓகேனக்கல் பூங்கா பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது கஞ்சா விற்பனை செய்ய முயன்ற வாலிபரை ஒகேனக்கல் காவலர்கள் பிடித்து விசாரித்தனர். இதையடுத்து ஒகேனக்கல் சத்திரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் காவலர்கள் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 500 ரூபாய்மதிப்புள்ள 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story