மது பாட்டிலால் வாலிபர் மண்டை உடைப்பு - ஒருவர் கைது

மது பாட்டிலால் வாலிபர் மண்டை உடைப்பு - ஒருவர் கைது
பைல் படம்
வடசேரி அருகே மது பாட்டிலால் வாலிபர் மண்டை உடைக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மேலும் 9 பேரை தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி, மேல கலுங்கடி பகுதியை சேர்ந்தவர் போஸ் மகன் சஞ்சய் (21). பட்டதாரி. சம்பவ தினம் சஞ்சய் வில்லுகுறியில் நடந்த நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றிருந்தார். அப்போது அவருக்கும் இறச்சகுளம் பகுதியை சேர்ந்த லெனின் (26) இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மாலையில் சஞ்சயை தேடி லெனின் தனது கூட்டாளிகளுடன் மூன்று பைக்குகளில் வடசேரி பகுதிக்கு வந்துள்ளார். புத்தேரி பாலம் அருகே நின்ற சஞ்செய்யை வழிமறித்து தகராறு செய்து மது பாட்டிலால் தலையில் அடித்தனர். இதில் சஞ்சய் பலத்த காயம் அடைந்தார். சம்பவத்தை பார்த்ததும் அருகில் இருந்த பொதுமக்கள் அந்த கும்பலை சுற்றி வளைத்ததும், அந்த கும்பல் சஞ்சய் - யை மிரட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த சஞ்சய் குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சஞ்சய் அளித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் விசாரணை நடத்தி லெனின் (26) அவரது கூட்டாளிகள் வில்லுக்குரிய சேர்ந்த அஜி (27), பாபு (23), மதன் (25 ) நீலகண்டன் (26), நவீன் டேனியல் மற்றும் கண்டால் தெரியும் 4 நபர்கள் உட்பட 10 பேர் மீது வடக்கு பதிவு செய்து செய்தனர் இதில் புத்தேரியை சேர்ந்த பாபு என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர் மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

Tags

Next Story