நாட்டுத்துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற வாலிபர்கள் கைது

நாட்டுத்துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற வாலிபர்கள் கைது

கைது

சேலம் அருகே நாட்டுத்துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் இரவு சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சேலம் உருக்காலை 2-வது கேட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர்.

அப்போது அவர்களிடம் நாட்டுத்துப்பாக்கி மற்றும் 2 தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் பெருமாம்பட்டி கோவில்காடு பகுதியை சேர்ந்த சிவா ( 27), கணவாய்காடு பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (26) என்பதும், வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கியை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் உரிமம் பெறாமல் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி, 2 தோட்டாக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story