இளம்பெண் மரணம் - போலீசார் விசாரணை

இளம்பெண் மரணம் - போலீசார் விசாரணை

காவல் நிலையம் 

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகேயுள்ள துட்டம்பட்டி பகுதியை சேர்ந்த சுப்புரு, இருசம்மாள் தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ள நிலையில் மைசூரில் கல் உடைக்கும் தொழில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தனது மூத்த மகள் சுமதியை இருசம்மாளின் தம்பி இருசாக்கவுண்டன் என்பவருக்கு கடந்த 2வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொடுத்துள்ளார். மேலும் தனது மூத்த மகள் வீட்டிலேயே இளைய மகள் ஷாலினி மற்றும் மகன் ஆகியோரை விட்டு விட்டு மைசூரில் தங்கி கல் உடைக்கும் தொழில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி மூத்த மகள் சுமதி அவரது வீட்டில் மயங்கி நிலையில் கிடப்பதாகவும், அவரை இளைய மகள் ஷாலினி உள்ளிட்ட பலர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இறந்து விட்டார் என்றும் இருசம்மாளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மைசூரில் இருந்து வந்த இருசம்மாள் கொடுத்த புகாரில் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story