தேய்பிறை அஷ்டமி : காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு!

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி நாளான காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடக்கமாக மஹாருத்ர ஹோமம் நடைபெற்றது. அதையடுத்து பைரவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வடைமாலை மற்றும் வெள்ளி அங்கிசாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில், சுற்றுவட்டார பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். வழிபாட்டில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், அழகிய நாச்சியம்மன் கோயிலில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Tags

Next Story