தேஜ கூட்டணிக்கு மக்கள் ஆதரவு உள்ளதால் 30 இடங்களில் வெற்றி:ஏ.சி.சண்முகம்

தேஜ கூட்டணிக்கு மக்கள் ஆதரவு உள்ளதால் 30 இடங்களில் வெற்றி:ஏ.சி.சண்முகம்

செய்தியாளர்களை சந்தித்த ஏ. சி சண்முகம்

தேஜ கூட்டணிக்கு மக்கள் ஆதரவு உள்ளதால் 30 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

புதிய நீதிக் கட்சியின் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் கிருபா தலைமையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் கலந்து கொண்டு கட்சி தொண்டர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி. சண்முகம் , நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இன்று மாலை தொகுதி பங்கீடு தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரை பா.ஜ.க வினர் அழைத்துள்ளதாக தெரிவித்தார்.

பிரதமர் அடிக்கடி தமிழகம் வருகிறார் என திமுக கூட்டணியினர் கூறுவது திமுக கூட்டணிக்கு எரிச்சலையும் , தோல்வி பயத்தை காட்டுகிறது என்றும் தமிழகத்தின் மாற்று சக்தியாக திராவிட இயக்கத்திற்கு சமமாக பா.ஜ.க வளர்ந்து உள்ளதாகவும் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு உள்ளதால் , இந்த முறை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியினர் 30 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றார். இந்திய கூட்டணியினர் இதுவரை வேட்பாளர் அறிவிக்கவில்லை,

அறிவிக்க முடியாது என்ற தமிழகத்தில் டாஸ்மா்க் கடைகள் அதிகப்படுத்துள்ளதே தவிர குறைக்கப்படவில்லை என்ற ஏ.சி.சண்முகம் தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags

Next Story