வாகன விபத்தில் தெலுங்கானா மாநில பெண் உயிரிழப்பு

வாகன விபத்தில் தெலுங்கானா மாநில பெண் உயிரிழப்பு

சுற்றுலா வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் தெலங்கானா மாநில இளம் பெண் உயிரிழந்தார்.


சுற்றுலா வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் தெலங்கானா மாநில இளம் பெண் உயிரிழந்தார்.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சியாம் பிரசாத் அங்கு டீக்கடை நடத்தி வரும் இவர், தனது உறவினர்களுடன் கேரளாவுக்கு சுற்றுலா சென்று விட்டு, மீண்டும் வேனில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்திற்கு உட்பட்ட மகேந்திரமங்கலம் அருகே, கொளத்தன.அள்ளி பிரிவு சாலையில் வேன் வந்த போது, முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றது. அப்போது, எதிர்பாராதவிதமாக வேனின் முன்பகுதி லாரியின் பக்கவாட்டில் மோதியது. இதில், வேனின் முன்பகுதியில் அமர்ந்திருந்த சியாம் பிரசாத் மனைவி ஸ்ரீதா படுகாயமடைந்தார். மற்றவர்கள் லேசான காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் ஸ்ரீதாவை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி, அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு சென்ற மகேந்திரமங்கலம் காவல்துறையினர் விபத்தில் சிக்கிய வேனை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story