திருப்புவனத்தில் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்புவனத்தில் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் ஆலய பங்குனி திருவிழா கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் ஆலய பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் ஆலயம். இங்கு பங்குனி திருவிழா பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம், இந்தாண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்ற வைபவத்தை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பின் கொடி மரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 22ம் தேதியும், தேரோட்டம் 23ம் தேதியும் நடைபெற உள்ளள. தினசரி அம்மனும் சுவாமியும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானமும், பக்தர்களும் செய்து வருகின்றனர்.

Tags

Next Story