கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு : 2பேர் கைது!

கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு : 2பேர் கைது!

கைது

குரும்பூர் அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகையை திருடிய சம்பவத்தில் 2பேரை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர். 
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே சுகந்தலை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த 2ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று அம்மன் கழுத்தில் கிடந்த 1.5 கிராம் பொட்டுத்தாலியை திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து கோவில் செயலாளர் மந்திரமூர்த்தி (எ) மோகன் (49) என்பவர் குரும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், சேதுக்குவாய்த்தான் கிழக்கு தெருவைச் சேர்ந்த விஜயராஜ் மகன் சதிஷ் (எ) சத்ய முகேஷ் (25), சொக்கப்பழங்கரை கிராமத்தைச் சேர்ந்த கோபால மகன் சச்சின் (24) ஆகிய 2பேரும் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து நகையை மீட்டனர்.

Tags

Next Story