கோவில் கும்பாபிஷேக விழா

செம்மண்கூடல் ஸ்ரீ எல்லம்மாள் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள செம்மண் கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லாயூரியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ எல்லம்மாள் கோவில் கும்பாபிஷேக விழாவானது கடந்த 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், கால்கோள் நடுதல், முளைப்பாரி இடுதல் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சியுடன் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக தொடங்கியது.

தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீர் ஏந்திய தீர்த்த குட ஊர்வலமும் நடைபெற்றது. இதை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேக விழா கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றியும், பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தும் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசு உள்ளிட்ட 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story