பக்தர்கள் வசதிக்காக கோவிலில் கழிப்பிட திறப்பு

பக்தர்கள் வசதிக்காக கோவிலில் கழிப்பிட திறப்பு

பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவிலில் ரூ. 9.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவிலில் ரூ. 9.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சட்டபேரவை அறிவிப்பு 2022- 23 ன் படி இந்து சமய அறநிலையத்துறை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் திருக்கோவிலில் பக்தர்களின் அடிப்படை வசதிகள் ஒன்றான கழிப்பறை ரூ. 9.25 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று காலை நடந்தது. அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், மராமத்து பொறியாளர் ஐயப்பன், ஸ்ரீகாரியம் மோகன்குமார், ஒப்பந்ததாரர் ராதாகிருஷ்ணன் உட்பட பக்தர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story