கோவில் பூசாரி மர்மமான முறையில் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருப்பவர் மாரிமுத்து(45). நேற்று கோவிலுக்கு பூஜை செய்துவிட்டு வருவதாக தனது வீட்டில் கூறி சென்றவர், இரவு முழுவதும் வராத நிலையில், கோவில் மேடு எனும் பகுதியில் பூசாரி மாரிமுத்து மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி கொலையா? தற்கொலையா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Next Story