கோயில் திருப்பணி கூட்டம்

கோயில் திருப்பணி கூட்டம்

திருப்பணிகள் ஆய்வு

பெரம்பலூர், அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் நடைப்பெற்ற திருப்பணி கூட்டத்தில் கோயில் திருப்பணிகளை உடனடியாக தொடங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர், அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் திருப்பணி கூட்டம் சிவன் கோவிலில் பிப்- 9ம் தேதி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தர்ம பரிபாலன சங்க தலைவர், செயலாளர், மற்றும் பொருளாளர். காரியகாரர்கள் நகர முக்கிய பிரமுகர்கள், பாபு, ராமலிங்கம், செந்தில், மகேஸ்வரன், பழனியப்பன், தர்மராஜன், ராஜமாணிக்கம், மணி, ராஜன்,பூபதி, பாலாஜி, முன்னாள் அறங்காவலர்கள் வைத்தீஸ்வரன், சரவணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருப்பணி வேலைகளை உடனடியாக ஆரம்பிப்பது. சிவாச்சாரியார் மூலம் பாலாலய தேதியை நிர்ணயம் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது. ஸ்தபதியார் கள் மூன்று பேரிடம் மதிப்பீடு தயார் செய்து பெறப்பட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story