கோவில் மரத்தில் தீ பிடித்து விபத்து - தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் !

கோவில் மரத்தில் தீ பிடித்து விபத்து - தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் !

 தீ  விபத்து

அனுமன் கோவிலில் உள்ள மரத்தில் தீ பற்றி எரிந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அண்ணாசிலை பாலம் அருகே அனுமன் கோவிலில் உள்ள இலவம்பஞ்சு மரம் வெகு நாட்களாக பட்டுப்போன நிலையில் பயன்பாடற்று இருந்தது. இந்நிலையில் அந்த மரத்திற்கு மர்ம நபர் யாரோ ஒருவர் தீ வைத்துள்ளார். இதனால் மரம் தீப்பற்றி எரிந்தது. கோவில் உள்ளே இருந்த மரம் மலமலவென்று எறிந்தது. நகரின் மையப்பகுதியில் கோவில் இருப்பதால் விரைந்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரியவந்தது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் கோவில் முழுவதும் தீப்பற்றி எரியாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நூலிழையில் அனுமன் கோவில் தீயிலிருத்து தப்பியது. மேலும் தீயணைப்பு படையினர் பட்டுப்போன மரத்தை அகற்றுபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story