பளுகல் அருகே செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்

பளுகல் அருகே செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்

செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்

பளுகல் அருகே டெம்போவில் செம்மண் கடத்தியவரை போலீசார் கைது செய்து டெம்போவையும் பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்டம் பளுகல் மலையடி பகுதியில் அதிகமாக செம்மண் கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் இன்று விடியற் காலை பளுகல் காவல் நிலைய போலீசார் மலையடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமாக வந்த டெம்போவை நிறுத்துமாறு சைகை காட்டியும் டெம்போ நிறுத்தாமல் சென்றுவிட்டது. உடனே டெம்போவை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று சாணி என்ற பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். மேலும் டிரைவரை கைது செய்த போலீசார் அவனிடம் விசாரணை செய்த போது அவர் அதே பகுதி கிறிஸ்டோபர் என்பது தெரிய வந்தது. மேலும் டெம்போவை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

Tags

Next Story