மக்களுடன் முதல்வர் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு - கலெக்டர் தகவல்

மக்களுடன் முதல்வர் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு - கலெக்டர் தகவல்

மாவட்ட ஆட்சியர் 

மக்களுடன் முதல்வர் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற இருந்த “மக்களுடன் முதல்வர்“ திட்டம் நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கபட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தகவல். பெரம்பலூர் நகராட்சி மற்றும் பூலாம்பாடி, அரும்பாவூர், லெப்பைக்குடிக்காடு மற்றும் குரும்பலூர் பேரூராட்சிகளில் “மக்களுடன் முதல்வர்“ திட்டத்தின் மூலம் 11.12.2023 முதல் 21.12.2023 வரை சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு வெளியிடப்பட்ட அறிவிப்பானது மிக்ஜாம் புயல் மற்றும் நிரவாக காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் பெரம்பலூர் நகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் “மக்களுடன் முதல்வர்“ திட்டத்தின் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story