கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடல்

கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடல்
கோவை குற்றாலத்தில் குளிக்க தடை

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்த நிலையில் கோவை குற்றாலத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கபட்டுள்ளது.இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் பொதுமக்கள் நலன் கருதி இன்று முதல் கோவை குற்றாலம் மூடப்படுவதாகவும் வெள்ளபெருக்கு குறைந்தவுடன் பொதுமக்கள் குளிப்பதற்கான உகந்த சூழல் வரும்போது அனுமதிக்கபடுவார்கள் என தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு தொடர் விடுமுறை நாட்கள் வரும் நிலையில் கோவை குற்றாலத்தில் குளிக்க வெளியிடபட்ட தடை அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags

Next Story