பயணிகளுக்கு தற்காலிக நிழற்குடை: தனியார் கல்வி குழும நிறுவனம் அசத்தல்

பயணிகளுக்கு தற்காலிக நிழற்குடை: தனியார் கல்வி குழும நிறுவனம் அசத்தல்

பயணிகள் நிழற்குடை

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எஸ். ஆர்.எம் கல்வி குழும வளாகத்தின் முன்பு சாலையின் இருபுறமும் தற்காலிக பயணிகள் நிழற்குடை அமைத்து கொடுத்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள எஸ். ஆர்.எம் கல்வி குழும வளாகத்தின் முன்பு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பயணிகள் நிழற்குடை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர் என சமூக ஆர்வலர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதனை அறிந்த எஸ்.ஆர்.எம் கல்வி குழும நிறுவனம் சமூக ஆர்வலரை தொடர்பு கொண்டு தற்காலிக பயணிகள் நிழற்குடை அமைத்து தருவதாக உறுதியளித்தனர். அதன்படி கல்வி குழுமத்தின் முன்பு சாலையின் இரு புறமும் பொதுமக்கள் பயனடையும் வகையில் தற்காலிக பயணிகள் நிழற்குடை அமைத்து கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து நிரந்தரமாக பயணிகள் நிழற்குடை அமைத்து தருகிறோம் என நிர்வாகம் சார்பில் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

சமூக ஆர்வலர் ஆர்வலரின் கோரிக்கை மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த எஸ் ஆர் எம் கல்வி குழும நிர்வாகத்திற்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story