தென்காசி : போக்குவரத்து விதிகளை மீறியதாக 245 வழக்குகள் பதிவு

தென்காசி :  போக்குவரத்து விதிகளை மீறியதாக 245 வழக்குகள் பதிவு

பைல் படம் 

தென்காசி மாவட்டத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், நேற்று தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்து 11 இடங்களில் போலீசாரால் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story