குடும்ப பிரச்சனையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சியில் உறவினர்கள்

குடும்ப பிரச்சனையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சியில் உறவினர்கள்
இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்

தென்காசி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் 2ம் தெருவை சேர்ந்த காளிராஜ் மகன் சுரேஷ்குமார். இவர் குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story