தென்காசி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

தென்காசி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
திமுக நாடாளுமன்ற வேட்பாளர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையரசேனந்தல், திருவேங்கடம், சங்குப்பட்டி, கலிங்கப்பட்டி, குருஞ்சாக்குளம், அழகாபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்தியா கூட்டணியின் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும் அப்போது திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களான மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து, காலை சிற்றுண்டி திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்து கூறியும், தற்போதைய தேர்தல் அறிக்கையில் பெண்கள் முன்னேறும் வகையில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் இடம் பெற்றிருப்பதாகவும் மகளிர் முன்னேறினால் மாநிலம் முன்னேறும் எனவும் தெரிவித்து வாக்குகளை சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜா எம்எல்ஏ, மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பாரகு, ஒன்றிய செயலாளர்கள் கிறிஸ்டோபர், சேர்மதுரை, குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story