தென்காசி : கனமழையால் நிரம்பிவழியும் குண்டாறு அணை

தென்காசி :  கனமழையால் நிரம்பிவழியும் குண்டாறு அணை

குண்டாறு அணை

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குண்டாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள குண்டாறு அணை நிரம்பியது. கண்ணுப்புளிமெட்டு பகுதியில் அணைந்துள்ள இந்த அணையின் உயரம் 36.10 அடியாகும். தற்போது இப்பகுதியில் பெய்துவரும் தொடா்மழையின் காரணமாக இந்த அணை நிரம்பி தனது முழு கொள்ளவை எட்டியுள்ளது. இந்த அணையின் மூலம் 731ஏக்கா் நிலங்கள் நேரடியாகவும்,391ஏக்கா் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. அணை நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

Tags

Next Story