சங்கரன்கோவில் : லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 பேர் கைது

சங்கரன்கோவில் : லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 பேர் கைது
லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டுவந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து சங்கரன்கோவில் டவுன் எஸ்.ஐ. சுரேஷ்கண்ணன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த 2 பேரை டவுன் போலீஸார் விரட்டி பிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1020 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story