தென்காசி : மோட்டை நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர் வரத்து

தென்காசி :  மோட்டை நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர் வரத்து

மோட்டை நீர்த்தேக்கம் 

செங்கோட்டை அருகே உள்ள மோட்டை நீர்த்தேக்கத்தில் நீர் வரத்து குறைந்து உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மோட்டை நீர்த்தேக்கம் விவசாயத்திற்கும் குடிநீர் தேவைக்கும் முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மோட்டை நீர்த்தேக்கத்தில் நீர் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் மோட்டை நீர்த்தேக்கத்தில் தண்ணீர் வெகுவாக குறைந்ததால் விவசாயிகளும் பொதுமக்களும் கவலை அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story