டென்சிங் நார்கே தேசிய விருது விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

டென்சிங் நார்கே தேசிய விருது விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் 

2023 ஆம் ஆண்டிற்கு சாகசம் புரிந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும், நாட்டிற்கு பெருமை தேடித் தரும் சாகசம் புரிந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, இந்திய அரசின் சார்பில் நிலம், கடல் மற்றும் வான்வழியில் சாதனை புரிந்தவர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இவ்விருதிற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களை இணைய http://awards.gov.in/- பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி 31.5.2024 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை விண்ணப்பதாரர்கள் 29.05.2024-க்கு முன் மாவட்ட விளையாட்டு அலுவலம், தஞ்சாவூரில் சமர்ப்பித்திட வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் அலுவலக தொலைபேசி எண் 04362-235633 , 7401703496 என்ற கைபேசி எண்ணிலும் அலுவலக வேலை நாட்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story