பிளாஸ்டிக் கம்பெனியில் பயங்கர தீ விபத்து

பிளாஸ்டிக் கம்பெனியில் பயங்கர  தீ விபத்து
பிளாஸ்டிக் கம்பெனியில் பயங்கர தீ விபத்து
தென்காசி மாவட்டம்,பூலாங்குளம் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூலாங்குளம் கிராமத்தில் இருந்து வட்டாலூர் செல்லும் சாலையில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைகண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடிய பின்பு தீயை அணைத்தனர், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story