பாடக புத்தகங்கள் வழங்கிய எம்எல்ஏ

திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் வழங்கினார்.

திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள் எம்.எல்.ஏ. வழங்கினார். திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு பள்ளிகள் திறந்ததை முன்னிட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் செல்வராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், துணை மேயர் பாலசுப்பிரமணியம், பகுதி செயலாளர்கள் மியாமி அய்யப்பன், மு.க.உசேன், மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட துணைச்செயலாளர் டிஜிட்டல் சேகர், வட்ட செயலாளர்கள் ரமேஷ், நந்தகோபால் மற்றும் கவுன்சிலர் திவாகரன், எல்.பி.எப். மாவட்ட தலைவர் பி.எஸ். பாண்டியன், மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி, தொண்டரணி அமைப்பாளர் ஆனந்தி, துணை செயலாளர் மகாலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story