தடா கோவில் - அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து

தடா கோவிலில் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, மீனாட்சி வலசு பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி வயது 48. இவர் ஜூன் இரண்டாம் தேதி காலை 10:30 மணி அளவில் கரூர் - திண்டுக்கல் சாலையில் உள்ள தடாகோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத டூவீலர் ஒன்று, நடந்து சென்ற தண்டபாணி மீது மோதி விட்டு மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது.

இந்த சம்பவத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த தண்டபாணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த தண்டபாணி யின் மகன் சந்தோஷ்குமார் வயது 26 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த அடையாளம் தெரியாத டூவீலர் எது? அதன் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்

Tags

Next Story