தைப்பூச விழா; காவடியாட்டத்துடன் பழனிக்கு படையெடுத்த பக்தர்கள்

சங்ககிரி அருகே அரசிராமணியில் தைப்பூச விழாவை முன்னிட்டு காவடியாட்டத்துடன் பக்தர்கள் பழனிக்கு படையெடுத்தனர்.
தைப்பூச விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்ட வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி செட்டிப்பட்டி பாலமுருகன் திருக்கோவிலிலிருந்து பக்தர்கள் காவடி எடுத்துக் கொண்டு அரசிராமணி சந்தைபேட்டை ,செட்டிப்பட்டி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக காவடி ஆட்டத்துடன் அரோகரா,அரோகரா என முழக்கமிட்டு பழனிக்கு புறப்பட்ட சென்றனர்.

Tags

Next Story