ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூச கொடியேற்றம்

பிரசித்தி பெற்ற செட்டிகுளம் அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளத்தில் அமைந்துள்ளது. அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில். இத்திருக்கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வாஸ்து சாந்தி, கணபதி பூஜை நடைபெற்றதை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடிமரத்தில் கொடி யேற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஜன.24ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

Tags

Next Story