தைப்பூச ஜோதி தரிசன பாதயாத்திரை குழுவினர் ராசிபுரத்திற்கு வருகை

தைப்பூச ஜோதி தரிசன பாதயாத்திரை குழுவினர் ராசிபுரத்திற்கு வருகை

ராசிபுரத்திற்கு வருகை தந்த யாத்திரை குழுவினர்

தைப்பூச ஜோதி தரிசன பாதயாத்திரை குழுவினர் ராசிபுரத்திற்கு வருகை புரிந்தனர்.

கோவை மாவட்டம் சமத்தூர் இராமலிங்கர் அறக்கட்டளை, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில், வள்ளலாரின் பெருமைகளை பற்றி மக்களுக்கு அறிவுறுத்தும் ஜோதி பாதயாத்திரை குழுவினர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திற்கு வந்தனர்.

கோவை மாவட்டம் சமத்துரில் இருந்து தொடங்கிய நடைப்பயணம் பொள்ளாச்சி, ஈரோடு வழியாக இன்று ராசிபுரத்திற்கு வருகை புரிந்தனர். அவர்களுக்கு ராசிபுரம் வள்ளலார் அறக்கட்டளை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் ராசிபுரம் வழியாக வடலூர் நோக்கி பாதயாத்திரை குழுவினர் நடைபயணமாக சென்றனர். தைப்பூசத்தன்று வடலூரில் ஜோதி தரிசனம் வெகு விமர்சியாக நடக்கும்.

Tags

Next Story