பழனி கோயிலில் தைப்பூசத் திருவிழா; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பழனி கோயிலில் தைப்பூசத் திருவிழா;  பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.  

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா நாளை 19ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. தைப்பூசத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையிலான அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags

Next Story