சேலம் : மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் - தாசில்தார் ஆய்வு

சேலம் : மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் - தாசில்தார் ஆய்வு
மக்களுடன் முதல்வர் முகாம்
சேலம் மாவட்டம், கெங்கவல்லி பேரூராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 287 மனுக்கள் பெறப்பட்டன.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி பேரூராட்சியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில், 13 துறையைச் சார்ந்த 287 மனுக்கள், பொதுமக்களிடம் பெறப்பட்டன.இதில் கணவாய்காடு பகுதியில், 23 பேர் வீட்டு மனைபட்டா கோரி விண்ணப்பித்திருந்தனர். கெங்கவல்லி தலைமையிடத்து தாசில்தார் முருகானந்தம் வருவாய் ஆய்வாளர் முனிராஜ், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் மற்றும் கெங்கவல்லி தாசில்தார் பாலாஜி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதில் வீட்டுமனைபட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களின் மனுக்கள், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்படும் என தாசில்தார் பாலாஜி தெரிவித்தார்.

Tags

Next Story