திமிரி காவல் நிலைய ஆய்வாளராக தனலட்சுமி இன்று பொறுப்பேற்பு

திமிரி காவல் நிலைய ஆய்வாளராக தனலட்சுமி இன்று பொறுப்பேற்பு

புதிய காவல் ஆய்வாளர்

திமிரி காவல் நிலைய ஆய்வாளராக தனலட்சுமி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் .

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி காவல் நிலைய ஆய்வாளராக தனலட்சுமி என்று பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் சால்வை அணிவித்து வரவேற்றனர். இவர் ஏற்கனவே செய்யாறு மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் என குறிப்பிடத்தக்கது.

புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட தனலட்சுமி திமிரி பகுதியில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், காவல் நிலையத்திற்கு வரக்கூடிய புகார்கள் மீது தனி கவனம் செலுத்தி உடனடியாக தீர்க்கப்படும் என தெரிவித்தார்.

ஏற்கனவே இந்த காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி பணி மாறுதல் பெற்று வேலூர் கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலையத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story