தஞ்சாவூர்- அரியலூர் ரயில்வே பணிகள் மேற்கொள்ள எம்.பி கோரிக்கை

பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்- அரியலூர் ரயில்வே வழித்தட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி ரயில்வே துறை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் சந்தித்து அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ரயில்வே வாரிய தலைவர் ஜெயா வர்மா சின்ஹா அவர்களை நேரில் சந்தித்து தஞ்சாவூர் சென்னை இடையே புதிய ரயில் வசதியினை தொடங்கவும், திருச்சி திருவனந்தபுரம், திருச்சி ஹௌரா மற்றும் திருச்சி பாலக்காடு ஆகிய விரைவு வண்டிகளை தஞ்சாவூர் வரை நீட்டிப்பு செய்யவும், தாம்பரம் செங்கோட்டை மற்றும் செகந்திராபாத் இராமநாதபுரம் விரைவு வண்டிகளை பேராவூரணி மற்றும் அதிராம பட்டினத்தில் புதிய நிறுத்தத்தை அமல்படுத்தவும், செந்தூர் விரைவு வண்டி இரு திசைகளிலும் பூதலூர் ரயில் நிலையத்தில் நிற்க வேண்டும் .

அரியலூர் - தஞ்சாவூர் பட்டுக்கோட்டை , மன்னார்குடி - பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் - புதுக்கோட்டை ஆகிய மூன்று புதிய ரயில்வே வழி தடங்களை உடனடியாக துவங்கவும் கோரிக்கை வைத்தார். மேலும் சென்னை எக்மோர் காரைக்குடி இடையிலான கம்பன் விரைவு வண்டியை மீண்டும் இயக்குவதற்கும், தாம்பரம் செங்கோட்டை விரைவு வண்டியை வாரம் 7 நாட்கள் இயக்கவும் கோரிக்கை வைத்தார். ரயில்வே துறைத் தலைவரும் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார்.

மேலும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் சந்தித்து அளித்துள்ள மனுவில், தஞ்சாவூர் பயணிகள் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வருவதற்கு ஏதுவாக அணுகு சாலை அமைக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு அவர்களிடம் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி நேரில் சந்தித்து மனு அளித்தார்

Tags

Next Story