கிருஷ்ணகிரியில் பட்டா வழங்கிய நகர் மன்ற தலைவருக்கு நன்றி

கிருஷ்ணகிரியில் பட்டா வழங்கிய நகர் மன்ற தலைவருக்கு நன்றி
நகர் மன்ற தலைவர் பரிதா நவாப் இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்
கிருஷ்ணகிரியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று உடனடியாக பட்டா வழங்கிய நகர் மன்ற தலைவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி நகரத்திற்குட்பட்ட பல்வேறு வார்டுகளில் பொதுமக்கள் நீண்ட நாளாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமாய் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதாநவாப் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 5 மற்றும் 6வது வார்டுகளில் குடியிருந்து வரும் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டாக்களை வழங்கினார்.

மேலும் 2வது வார்டில் குடியிருக்கும் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டவர்களுக்கும் பட்டாக்களையும் வழங்கினார். மொத்தம் 600 பட்டாக்களை வழங்கிய நகர மன்ற தலைவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

பொதுமக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையான வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக பல கட்டமாக பொதுமக்கள் மனுக்களை வழங்கி வந்த நிலையில் இன்று பொதுமக்கள் பட்டாக்களை பெற்றுக் கொண்டதால் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர் . சுமார் 600 க்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் பரிதாநவாப்,

நகர மன்ற உறுப்பினர்கள் மீனா நடராஜன், விஜயா நாகராஜன், தேன்மொழி, சுகுமார், புவனேஸ்வரி, டாக்டர்.சுரேஷ், வட்டச் செயலாளர் வாஜித், வட்டப் பிரதிநிதி வினோத்குமார், நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை, நகராட்சி வருவாய் ஆய்வாளர் காயத்ரி, நில அளவையாளர் ரவி, உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story