பெரம்பலூரில் 13 வது பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சி

பெரம்பலூரில் 13 வது பரதநாட்டிய  அரங்கேற்றம் நிகழ்ச்சி

அரங்கேற்றத்தில் கலந்து கொண்டவர்கள் 

பெரம்பலூரில் 13 வது பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அருணாலய நடன மற்றும் இசைப் பள்ளி நடத்தும் 13 வது பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சி டிசம்பர் 30ஆம் தேதி மாலை நடைபெற்றது.

அருணாலயா நடன மற்றும் இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் அபர்ணா ப்ரீத்தா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிராமங்களை நோக்கி இந்திய கலைகள் என்ற பெயரில்முன்னெடுத்துச் செல்லும் துறையூர் ஸ்ரீ ரங்கா அகாடமி ஆப் பைன் ஆர்ட் தலைவர் ராஜதுரை கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதில் பல்வேறு வகையான நடனங்களை கலாச்சார முறையில் மேடையில் அரங்கேற்றம் நடத்தினார்கள். அருணாலய நடன மற்றும் இசைப்பள்ளி சேர்ந்த அங்கயர் கன்னி, அருட்செல்வன், உஷாராணி, ஆகியோர் வரவேற்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடன மற்றும் இசைப்பள்ளி ஆசிரியர் மணிகண்டன் உள்ளிட்ட, நடன பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story