திருப்பத்தூரில் 3ஆம் ஆண்டு புத்தக திருவிழா !!

திருப்பத்தூரில் 3ஆம்  ஆண்டு புத்தக திருவிழா !!

புத்தக திருவிழா

திருப்பத்தூரில் 3ஆம் ஆண்டு புத்தக திருவிழா நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலை அருகே இயங்கி வரும் தூய நெஞ்சக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு திருப்பத்தூர் புத்தக திருவிழா ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ‌ திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் தலைமையேற்றும் திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி முன்னிலையில் புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் துவங்கப்பட்டதில் இருந்து 3வது முறையாக புத்தக திருவிழா இன்று நடைபெற்றது. விழா பேருரை சிறப்பு முறையை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடனம் நடைபெற்றது. இந்த புத்தகத் திருவிழா இன்று 27ஆம் தேதி முதல் வருகின்ற 7தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த புத்தக திருவிழாவில் 80 அரங்குகள் அமைக்கப்பட்டு சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்நிகழ்ச்சியில் திமுக முக்கிய நிர்வாகிகள் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story