டூவீலரில் சென்ற இளைஞனின் வாகனம் சென்டர் மீடியனில் மோதி விபத்து

டூவீலரில் வேகமாக சென்ற இளைஞனின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்து.போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம், முசிறி, சிட்லரை காலனி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் மகன் சரவணபாபு வயது 23. இவர் பிப்ரவரி 11ஆம் தேதி மாலை 5 மணி அளவில், திருச்சி- கரூர் சாலையில் அவருக்கு சொந்தமான டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது டூவீலர்,கரூர் மாவட்டம், மாயனூர் காவல் எல்லைக்குட்பட்ட, வீரராக்கியம் பிரிவு அருகே வந்தபோது, டூவீலரை வேகமாக செலுத்தியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், சரவணபாபுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சரவணபாபுவின் தந்தை நாகராஜன் இது குறித்து மாயனூர் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாக ஓட்டி, விபத்து ஏற்பட காரணமான சரவணபாபு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.

Tags

Next Story