திருமருகல் அருகே தூர்வாரும் பணிகளை மாவட்ட கூடுதல் கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருமருகல் அருகே தூர்வாரும் பணிகளை மாவட்ட கூடுதல் கலெக்டர் தொடங்கி வைத்தார்

 தூர்வாரும் பணி

நாகை மாவட்டம் திருமருகல் அருகே தூர்வாரும் பணிகளை மாவட்ட கூடுதல் கலெக்டர் தொடங்கி வைத்தார்
நாகை மாவட்டம் திருமருகல் அருகே தூர்வாரும் பணிகளை மாவட்ட கூடுதல் கலெக்டர் தொடங்கி வைத்தார் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சி பொறக்குடி பாசன வாய்க்கால் தூரம் 4 ஆயிரம் மீட்டர் ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை நாகை மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், செயற்பொறியாளர்கள் வெண்ணாறு வடிநிலக்கோட்டம் ராஜேந்திரன்,காவிரி வடிநிலக்கோட்டம் தஞ்சாவூர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர்கள் செங்கவராயன், கமலக்கண்ணன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் அஜிதா ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜகோபால், ஜவகர், உதவி செயற்பொறியாளர்கள் குருசக்திவேல், செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story