பாஜக முன்னாள் நிர்வாகியை மீண்டும் அழைத்த நிர்வாகிகள்

பாஜக முன்னாள் நிர்வாகியை மீண்டும் அழைத்த நிர்வாகிகள்

முன்னாள் நிர்வாகிகளை அழைத்த பாஜகவினர்


பா.ஜ.க. முன்னாள் மாவட்ட செயலரை குமாரபாளையம் பா.ஜ.க. முன்னாள் நிர்வாகிகள் சந்தித்து, மீண்டும் கட்சிப்பணியாற்றி, பா.ஜ.க. வெற்றிக்கு துணையாக இருக்க கேட்டுக்கொண்டனர்.

பா.ஜ.க. முன்னாள் மாவட்ட செயலரை குமாரபாளையம் பா.ஜ.க. முன்னாள் நிர்வாகிகள் சந்தித்து, மீண்டும் கட்சிப்பணியாற்றி, பா.ஜ.க. வெற்றிக்கு துணையாக இருக்க கேட்டுக்கொண்டனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையின் போது நடந்த பொதுக்கூட்டத்தில் நாமக்கல் ஒருங்கிணைந்த முன்னாள் மாவட்ட செயலர் ஓம் சரவணா பங்கேற்றார்.

பாரத பிரதமர் மோடியின் திட்டங்களை நிறைவேற்றிட, மாவட்ட பா.ஜ.க. நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற முன்வந்த ஓம் சரவணாவிற்கு பா.ஜ.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

நகர முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியம், முன்னாள் மாவட்ட செயலர் சுகுமார், முன்னாள் நகர பொதுச்செயலாளர் . தனசேகரன், முன்னாள் மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் குமாரபாளையம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story